Wednesday, February 10, 2010

தண்ணீரில் கலையா கவிதை

கனவொன்று நிஜமொன்று
நிலவில் ஏன் கரையின்று
மழை மேகங்கள் சூழும் முன்
காற்றை போல் வருவாயா

வானின் நீலம்
நிறம் மாறவே
கனவின் கோலங்கள் கரைந்தனவே
தரை தீண்டும் முன்னமே
நிஜத்திலும் உள்ள வாசம் உணர்ந்தேன்
மண்வாசம் கண்டேன்